Search This Blog

Wednesday, October 25, 2023

Sai Baba Message 26/10/23

 *பாபாவின் பக்தி மங்களங்கள் உண்டாக்கும் !*

_*அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால் சிலர் ஆரம்பகாலத்தில் பாபாவின் திருவாய்மொழியை மணக்கோணலுடன் உதாசீனப்படுத்தி நஷ்டத்திற்கு ஆளாவார்கள் .   ஆயினும், பின்னர் பாபாவின் மீது பக்தியுடன் நம்பிக்கையும் விசுவாசமும் ஏற்பட்டால் , மங்களங்கள் விளையும்.*_

- ஸ்ரீசாய் சத்சரித்திரம்

Wednesday, October 11, 2023

Sai Baba Message 12/10/23

 


*நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கும் ஸ்ரீசாய் சத்சரித்திரம் !*

_*பாபாவின் பாத தீர்த்தமாகிய சத்சரித்திரம் எனும் கதை அமிர்தத்தை நம்முடைய நித்தியமங்களம் கருதி தினமும் பருகினால் நம் உடலும் உள்ளமும் தூய்மையாகும் !*_

- ஸ்ரீசாய் சத்சரித்திரம்

Wednesday, September 20, 2023

Sai Baba Message 21/09/23

 *நம்மையும் நம் வாழ்வையும் பரிசுத்தமாக்கும் "சாயி" நாமஜெபம் !*._*நம்மையும் நம் வாழ்வையும் பரிசுத்தமாக்கிக்கொள்ள  "சாயி" நாமஜெபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை.  "சாயி" நாமமே நாக்குக்கு அணிகலன்.  "சாயி" நாமமே ஆன்மீக வாழ்வைச் செழிப்பாக்கும் உரம்.  "சாயி" நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை.  "சாயி" நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திர விதிகளுக்கும் உட்பட்டதன்று.  "சாயி" நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும்.  "சாயி" நாமம் என்றும் எப்பொழுதும் புனிதமானது.*_

- ஸ்ரீசாய் சத்சரித்திரம் 

_*ஓம்ஸாயீ ஸ்ரீஸாயீ ஜெயஜெயஸாயீ ஓம்ஸாயீ ஸ்ரீஸாயீ ஜெயஜெயஸாயீ ஓம்ஸாயீ ஸ்ரீஸாயீ ஜெயஜெயஸாயீ!*_

Sunday, September 17, 2023

ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி

 *"ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி"*



எழுதியவர்:

ஸ்ரீதாஸ்கணுமஹாராஜ்.

(இயற்பெயர் : கண்பத்ராவ் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே)

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவைப் போற்றிப் புகழும் *"ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி"* என்ற ஸ்துதிமாலை, 

 பாபா சீரடியில் வாழ்ந்த போதே,  *"1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி , அதாவது விநாயகர் சதுர்த்தி தினம்  திங்கட்கிழமையன்று எழுதி முடிக்கப்பட்டது.*"

_இதற்குப்பின் 37 தினங்களில், அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பாபா மஹாசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது._

_*இந்த ஸ்ரீசாயிநாத‌ ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையில் 146 முதல் 156 வரை உள்ள ஸ்லோகங்கள்,  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி படிப்பவர்கள் அடையப்போகும் நன்மைகளைப் பற்றி விரிவுபட கூறப்பட்டுள்ளது.*_

தினந்தோறும் தவறாமல் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட வேண்டிய புனிதநூல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஆகும்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையானது  ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண ஆசியையும் அருளையும் பெற்ற ஓர் அற்புதமான ஸ்துதியாகும்.


எனவே, சாய் பக்தர்கள் அனைவரும் தவறாமல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரியை தொடர்ந்து பாராயணம் செய்யும்படியும்,  தினமும் நித்யபாராயணம் செய்யும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




முக்கியக் குறிப்பு :


_*இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி பாராயணம் செய்துமுடித்த கையோடு, ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் காணிக்கையை ஸ்ரீ சாயிநாதருக்கு தட்சணையாக செலுத்தி, உங்கள் பிரார்த்தனைகளை அவருடைய திருவடிகளில் சமர்ப்பணம் செய்யுங்கள். அப்படிச் செய்வதினால் பாராயணம் செய்த பலனை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.  இது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பதுவும் நிச்சயம்.*_

அதேநாள் இன்று...

_*"2023ம்‌ ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை !"*_

Wednesday, September 13, 2023

Sai Baba Message 14/9/23

 *மாபெரும்  குரு சாயிபாபா!*


*தாமோதராசனே என்பவரின் மகன் தெளலத்ஷா தனது அனுபவத்தை குறிப்பிடுகிறார்..*

*1927 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண மகாராஜை வணங்கிய போது அவர் "உனது குரு (சாயிபாபா) மேலான குரு.என்னைக்காட்டிலும் பன்மடங்கு  மேலானவர்.ஏன் என்னிடம் வருகிறாய்?. அத்தகைய பரமபுருஷரை நீ தேர்ந்தெடுத்தது உனது பூர்வஜென்ம புண்ணியமே!. நீ அவரிடமே செல் உனது நோக்கம் நிறைவெய்தும்".. என்றார்.*

✨ *ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்* ✨

Thursday, September 7, 2023

Sai Baba Message 07/09/23

 *அஹங்காரத்தினால் பாபாவை விட்டு விலகி விடாதீர்கள் !*


_*தங்களின் அஹங்காரத்தின் காரணமாக நாங்கள் புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் என சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும் பாபாவை விட்டு விலகி, சம்சார குழியில் விழுந்து அழிகிறார்கள்.  ஆனால், மிகவும் ஏழ்மையான, எளிமையான, சாதாரண  பக்தர்களை பாபா தன்னுடைய சக்தியினால் காப்பாற்றி அருள்புரிகிறார்.*_

- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்

Wednesday, August 30, 2023

Sai Baba Message 31/08/23


 *பாபாவின் கதைகளை பயபக்தியுடன் கேளுங்கள் ! துன்பமும் துயரமும் நீங்கி வாழ்வு மேம்படும் !*

_*"பூர்வஜன்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே பாபாவின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும்.  பாபாவின் கதைகள்  பயபக்தியுடன்  கேட்கப்பட்டால், துக்கமும் மோஹமும் அனர்த்தமும் , கேடுகளும்,  துன்பமும் துயரமும் நிவிர்த்தியாகும்;  பக்தரின் வாழ்வு மேம்படும்."*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, August 16, 2023

Sai Baba Message 17/08/23

 


*குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நமக்கு நலல்தே நடக்கும் !*

_*குருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப்  போன்றது.  குருவின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும்.  குருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் கவலைப்படாதீர்கள் ! பயப்படாதீர்கள் ‌! குருவின் மீது  திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் !*_

- ஸ்ரீகுரு சரித்திரம்


Wednesday, August 9, 2023

Sai Baba Message 10/08/23


 *இந்த மசூதி ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை !*

_*இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை.  இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே நலத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார்.  நீங்கள் ஒவ்வொருவரும் இதை அனுபவத்தில் காண்பீர்கள்.  இந்த துவாரகாமாயியின் மசூதிக்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.  இங்கு வந்த உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக !*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Wednesday, August 2, 2023

Sai Baba Message 03/08/23

 *ஸ்ரீசாய் சத்சரித்திரம் எனும் தேவலோக அமிர்தம் !*



_*"அனுதினமும் காலையிலோ, மாலையிலோ, இரவிலோ ஸ்ரீஸாயீ சத்சரித்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.  நீங்கள் ஒவ்வொரு நாளும் பாபாவுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்யாமல் இருந்திருக்கலாம்,  நீராட்டுவதற்கு மறந்திருக்கலாம்,  எத்தனையோ பூஜை புனஸ்காரங்களை, நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம்.   ஆனால்,  ஸ்ரீஸாயீ சத்சரித்திர பாராயணம் செய்யும் நேரத்தை மட்டும் என்றுமே மறக்காதீர்கள்.  எந்த பாக்கியவானின் உதடுகளுக்கு,  இந்த தேவலோக அமிர்தத்தையொத்த ஆத்ம போதனையான ஸ்ரீஸாயீ சத்சரிதம் பாராயணம் வாசிக்க வருகிறதோ,  அவர் மூன்று விதமான தாபங்களையும் உடனே கடந்துவிடுவார் ;  மோட்சம் அவரது பாதங்களை தேடி நாடிவரும் !"*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, July 26, 2023

Sai Nesha Groups Magazine Digital India Issue-15













 

Sai Baba Message 27/07/23


 *பாபா !  எங்களுக்கு உங்களுடைய பரிபூரண ஆசியை அளியுங்கள் !*

_*ஓ.. ஸாயீ..! சோகத்தில் மூழ்கியிருக்கும் எங்களுடைய மனத்தில் இருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள். அடைய முடியாததை அடைவதற்கு எங்களுக்கு உதவி செய்யுங்கள் பாபா!  நாங்கள் ஒரே கஷ்டப்படுகிறோமே! எங்களுக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா? உலகில் எங்கெங்கோ யாத்திரையெல்லாம் சென்றுவிட்டு,  இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சீரடிக்கு வந்திருக்கிறோம். எங்களிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது ?. எங்களைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி, ஏக்கத்தால் வெம்பிப்போக செய்யவேண்டும் ? இப்பொழுதாவது எங்கள் மீது கிருபையுடன் கடாட்க்ஷம் செய்யுங்கள் ! எங்களுக்கு உங்களுடைய பரிபூரண ஆசியை அளியுங்கள்!*_

- ஸ்ரீ சாயி சத்சரித்திரம்

( *பாபாவைக் காண வந்த ஒரு பக்தருக்காக மாதவ்ராவ் பாபாவிடம் வேண்டியது.  நாமும் இவ்வாறே பாபாவிடம் வேண்டிக் கொள்வோமாக!* )

Wednesday, July 12, 2023

Sai Baba Message 13/07/23

 *பாபாவின் வார்த்தைகளே பலன்தரும் நம்பிக்கையின் அஸ்திவாரம் !*

_*பாபாவின் வார்த்தைகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே‌ அவரிடமிருந்து பெறும் பலனுக்கான அஸ்திவாரம்.  இங்கு சந்தேகம் என்பதற்கு துளியும் இடமில்லை !*_




- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Thursday, July 6, 2023

Sai Baba Message 06/07/23

 *ஸ்ரீசாயி சத்சரித்திரம் ஓர் கர்மயோக போதனைத் தொகுப்பு !*

_*தீயன செய்யத் தூண்டும் கலியுக மயக்கங்களுக்கும், பேராசையால் விளையும் கவலைகளுக்கும் மத்தியில் மாட்டிக்கொள்ளாமல் நம்மைக் காக்கும் சக்தி வாய்ந்த, கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பெற்ற கர்மயோக போதனைத் தொகுப்பே சாயியின் சத்சரித்திரம்.*_




- ஸ்ரீசாயி சத்சரித்திரம்

( _*சாய் பக்தர்கள் அனைவரும்  ஸ்ரீசாயி சத்சரித்திரத்தில் தினமும் ஒரு அத்தியாயம் தவறாமல் நித்யபாராயணம் செய்து பாபாவின் அனுக்ரஹத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள் !*_ )

Wednesday, June 7, 2023

Sai Baba Message 8/6/23

 *உள்ளம் தூய்மையாக இருந்தால் எவ்விதக் கஷ்டமும் இல்லை !*



_*உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை.  நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்?  நீ உன் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Wednesday, May 31, 2023

Sai Baba Message1/06/23

 *கலியுகக் கெடுதல்கள் அத்தனையையும் அழிக்கும் திறமை கொண்ட ஒரே பெயர் ஸாயீ.. ஸாயீ.. ஸாயீ..!*

"யாவன்ன கீர்த்தயேத்   ஸாயீ கலிகல்மஷ நாசனம் தாவத் திஷ்டதி தேஹேஸ்மின்;"

_*"கலியுகத்தில் எல்லாக்   கெடுதல்களையும்  அழிக்கும் திறமை கொண்ட ஒரே பெயர் ஸாயீ.. ஸாயீ.. ஸாயீ.. அப்பேர்ப்பட்ட ஸாயீநாதனின் பெயரை சாய்கீர்த்தனைகள் மூலம் ஒருவன் திரும்பத் திரும்ப  கூறாதவரை,  உடலுடன் இருந்தும் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கிறான்."*_

- ஸ்ரீசாயிநாத மனனம்

Thursday, May 25, 2023

Sai Baba Message 25/05/23

 *"ஸாயீ"  திருநாமத்தை வாயாரப்பாடி மனமாரத் துதியுங்கள் !*

_*ஓ.. ஸாயீ..! எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி மனமார துதிக்கிறானோ, அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாசம் செய்து அனுக்கிரஹம் செய்து அருள்பாலிக்கிறீர் பாபா !*_

- பாபாவின் ஆரத்தி பாடலில்

Wednesday, May 17, 2023

Sai Baba Message 18/05/23

 *பாபாவால் காப்பாற்றப்படுவோம்  !*



_*"நேரம் மிகமிகக் கெட்டதாக இருந்த போதிலும், பாபாவின் மீதான நம்பிக்கையிலும் பக்தியிலும் பலம் இருந்தால் மட்டுமே,  நாம் பாபாவால் காப்பாற்றப்படுவோம் !"*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, May 10, 2023

Sai Baba Message 11/05/23

 *பாபாவின் பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டால் வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வராது  !*

_*பாபாவின் இரண்டு பாதங்களையும் இறுகப்பற்றிக் கொண்டவருடைய பாவங்கள் அனைத்தும் அழியும்.  பூர்வஜென்ம நல்வினைகளின் பலன்கள் மேல்தளத்திற்கு எழும்பும்.  வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வராது !*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, May 3, 2023

Sai Baba Message 4/05/23

 


*பாபாவின் பாதங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மிகச்சிறந்த வெற்றியை அடைவார்கள் !*

*கொடுப்பதிலும் வாங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் பேச்சிலும் சிந்தனையிலும்  எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும் பாபாவின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வெற்றியை அடைவார்கள் என்பது உறுதி !*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, April 26, 2023

Sai Baba Message 27/04/23

 *சாயியின் சத்தியமான விரதம் !*

_*தன்னை மட்டுமே நம்பி சரணாகதி அடைந்த பக்தனுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல்  காப்பாற்றுவதே ஸாயீயினுடைய சத்தியமான விரதம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் !.*_


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Thursday, April 13, 2023

Sai Baba Message 13/04/2023


 நீ என்னை பார்க்க முடியும்🙏

*நடந்து கொண்டிருப்பதை நடத்திவைப்பது  உன் உள்ளிருக்கும் நானே என்று நீ கண்டுகொண்டால் ஒரு  க்ஷண காலத்தில் நீ  என்னை பார்க்க முடியும்.நான் என்ற விஷயத்தை நீ மறந்த அதே வினாடியிலேயே  நானாகவே உன் முன்பாக இருப்பேன்.உன்னுடைய  ஆத்ம சொரூபமே  நான்.*

---ஷீரடி சாய்பாபா.

Wednesday, April 5, 2023

Sai Baba Message 6/04/23

 *உனக்கு நேரும் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள் !*

_*எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீரவேண்டும்.  "நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வ­லியாகவும், வேதனைகளாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?  மேலும்,  "துன்பத்தையும் வ­லியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும்.  ஆகவே, உனக்கு நேரும் இந்தத் துன்பத்தை இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே !*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Wednesday, March 29, 2023

Sai Baba Special Day

 


ஸ்ரீ ராம ராம ரமேத்தி் ரமே ராமே மனோ ரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

ஸாயி ராம ரமேதி ஸாயி ராம மனோ ரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ஸாயி ராம வரானனே

இனிய ராம நவமி வாழ்த்துக்கள்

Sri Rama Rama Ramethi Rame Ra may Mano Rame Sahasra Nama Thathulyam Rama Nama Varanane

Sai Rama Ramethi Rame Ra may Mano Rame sahasra Nama Thatulyam Sai Rama Varanane.

Happy Ram Navmi

Thursday, March 23, 2023

Sai Baba Message 23/03/23

 *ஸாயீயின்  கதைகளை தினமும் கேளுங்கள் !*

_*என்னுடைய கதைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதைப்பற்றியே சிந்தனை செய்யுங்கள்.  பிறகு அதையே மறுபடியும் மறுபடியும் தியானம் செய்யுங்கள். அவ்வாறு என் கதைகளை தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டு,  சிந்தனை செய்தால் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் விளையும்.*_ 

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Saturday, March 18, 2023

ஆன்மீகப் பாதையில்

 _*சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை யார் ?*_ 

சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும்.அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம் .அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களைஎல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான்.முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.””வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு.ஆக..சிவனுக்கு ஒரே மனைவி என்பது சான்றோர் கருத்து..


Thursday, March 16, 2023

Sai Baba Message 16/03/23



 *யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார் பாபா !

_*"ஸாயீயின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.  யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார்.   இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று ஸாயீ தரிசனம் செய்யுங்கள் !"*_

-ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, March 8, 2023

Sai Baba Message 9/03/23

 *உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்தது எது என்பதை நான் அறிவேன் !*

_*உதிப் பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  உங்களிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, எது மிகப் பொருத்தமானது என்பதை நான் அறிவேன்.  அமைதியுடனும் திருப்தியுடனும் வாழுங்கள் !*

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Thursday, March 2, 2023

Sai Baba Message 02/03/2023

 உண்மையான பக்தன்

ஆடம்பரங்களையும், வெளித்தோற்றத்தையும் நான் பொருட்படுத்துவதே இல்லை. எவனொருவன் உள்மனதில் 'சாயி, சாயி ' என்று சொல்லி வருகிறானோ, அவனே உண்மையான பக்தன். அவனிடமே நான் வசிக்கிறேன்.

 - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

 https://youtube.com/@neshaganesh

Wednesday, February 22, 2023

Sai Baba Message 23/02/23

 *மனத்தூய்மை செயல்தூய்மை வாக்குத்தூய்மை கொண்டிருங்கள்!*


_*ஒரு மனிதன் வறுமையின் பிடியிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் விடுபடவேண்டும் என்றால் அவன் *மனத்தூய்மை, வாக்குத்தூய்மை, மற்றும் செயல்தூய்மை*பெற்றிருக்க வேண்டும்.  இதற்கு "திரிகரண சுத்தி" என்று பெயர்.  மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ, அதுவே பேச்சாக வரவேண்டும்.  எது பேச்சாக வெளிப்படுத்தப்படுகிறதோ, அதுவே செயலிலும் காணப்பட வேண்டும்.  ஒரு "திரிகரண சுத்தி" அடைந்த மனிதன் மஹாபுருஷன் ஆகிறான்.

- ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்

Wednesday, February 15, 2023

Sai Baba Message 16\02\23

⊪𣿶‹ ð£ð£M¡ ð‚FJ™ ñù‹ å¡PJ¼‚è H󣘈FŠ«ð£‹ !

"ÜÂFùº‹ ú£f¬ò êóí¬ì«õ£‹ ; «îý ÜHñ£ùˆ¬î ú£f ð£îƒèO™ åŠð¬ìˆ¶M´«õ£‹.  ⊪𣿶‹ ñ Üõ¼¬ìò ð‚FJ™ ñù‹ å¡P  à¬ìòõù£è¾‹, àôè ݬêèO­L¼‰¶ M´ð†ìõù£è¾‹ ¬õˆF¼‚°‹ð® Þîò̘õñ£èŠ H󣘈FŠ«ð£‹."

- ÿú£f úˆêKˆFó‹


Wednesday, February 1, 2023

Sai Baba Message 02/02/2023

 


குருவுக்கு விருப்பமில்லாதது நமக்கு எதுவும் வேண்டாம் !

எவன் ஒருவன், "எனக்கு என் குருவே சகலமும், என் குருவுக்கு விருப்பமில்லாதது எதுவுமே எனக்கு வேண்டாம்" என்று அவரை அறிந்து சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான் !

- ஸ்ரீகுரு சரித்திரம்

https://youtube.com/@neshaganesh

Wednesday, January 11, 2023

Sai Baba Message 12/01/23

 *என்னை நம்புங்கள், மிகுந்த பலனை அடைவீர்கள் !*

_*"என்னையே எப்போதும் நினைவு கூருங்கள்.  உள்ளம், உயிர் இவற்றால் என்னைச் சரணடைந்து நம்புங்கள்.   அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள் !"*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

https://youtube.com/@neshaganesh


Monday, January 9, 2023

Wednesday, January 4, 2023

Sai Baba Message 5/01/23

 *குருவின் கடைக்கண் பார்வை 

_*"குருவின் கடைக்கண் பார்வை கோடி ஜன்ம பாவங்களை விலக்கும்.  எஞ்சிய வாழ்வும் வளம்பெற பிரகசமான ஒளி தரும் !

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

https://youtube.com/@neshaganesh