Search This Blog

Wednesday, December 28, 2022

Sai Baba Message 29/12/22

 *குருபக்தியின் வழிபாட்டு முறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் !*என்னுடைய பக்தர்களான நீங்கள் அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டு மதிக்கப்படுவீர்கள்.   ஒருநாளும் குருசேவையில் உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள் ! குருபக்தியின் வழிபாட்டு முறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் ! ஆயினும் முழுவதுமாக உங்களை அந்தப் பயிற்சியில் இயந்திரகதியாக மாற்றிக்கொள்ள

 வேண்டாம் !*_

- ஸ்ரீ கஜானன் மஹாராஜ்

https://youtube.com/@neshaganesh

https://mobile.twitter.com/saineshagroups

Wednesday, December 21, 2022

Sai Baba Message

 *ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசன மஹிமை !*





_*ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் இருதயத்தின் இறுக்கமான முடிச்சுகளையும் அவிழ்க்கும் பலம் வாய்ந்தது. ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் புலனடக்கம் கிடைக்கச் செய்யும் அற்புதம் வாய்ந்தது. ஸத்குரு ஸாயீபாபாவின்  தரிசனம் முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும், இந்த  ஜென்மத்தில் செய்த பாவங்களையும் ஒருசேரச் சேர்த்து அழித்துவிடும் மஹாசக்தி வாய்ந்தது.  இப்பேர்பட்ட மஹானான ஸத்குரு ஸாயீபாபாவின் புகழையும் பெருமையையும் நாம் எப்போதும் பாடுவோமாக !*_


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

https://youtube.com/@neshaganesh

http://saineshagroups.blogspot.com

Wednesday, November 30, 2022

SAI BABA MESSAGE


*பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !*


_*பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை !*_


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

https://youtube.com/@neshaganesh

Wednesday, November 16, 2022

ஸ்ரீகுருசரித்திரம்

 *உங்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறப்பார்கள் !*





ஸ்ரீகுரு :  _*அம்மா !  நீ வருடக் கணக்கில் எனக்கு பூஜை செய்கிறாய். ஆனால், உன் கோரிக்கை என்னவென்று சொல்லவில்லையே? அது எதுவாக இருந்தாலும் என்னிடம் கேள்!  அந்த மகேசனின் தயவில் நான் தீர்த்து வைக்கிறேன்.*_


கங்கா :  _*சுவாமி ! நான் முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை! அதனால் எனக்கு இந்தப் பிறவியில் பிள்ளைப்பேறு இல்லை.  எல்லோரும் என்னை மலடி என்று சொல்கிறார்கள். எனக்கு வயதும் ‌60 ஆகிவிட்டது. ஆகையால், அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் உங்களை சேவிக்கிறேன்.*_


ஸ்ரீகுரு :  _*அம்மா ! உங்களுக்கு அடுத்த பிறவியில் குழந்தைகள் பிறந்தால் அது நான் கொடுத்த வரத்தால் என்று எப்படி உங்களால் நினைக்க முடியும்? ஆகையால், இப்பொழுதே இந்தப் பிறவியிலேயே உங்களுக்கு "ஒரு மகனும் மகளும் பிறப்பார்கள்" என்று ஆசீர்வதிக்கிறேன் !*_


- ஸ்ரீகுருசரித்திரம்


(தர்மம் தவறாமல் வாழ்ந்த பிராமணரின் பதிவிரதையான கங்கா எனும் 60 வயது அம்மையாருக்கும் ஸ்ரீகுருவுக்கும் நிகழ்ந்த உரையாடல்.  குருவின் மீது திடமான நம்பிக்கை இருந்தால் எதுவும் நடக்கும்