Search This Blog
Wednesday, October 22, 2025
Wednesday, October 15, 2025
Shirdi Sai Baba Message
குருவினிடத்தில் பக்தி பா(BHA)வமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில்,ஆறு உள் எதிரிகளை (காமம்,கோபம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சரியம்)வெல்லமுடியாது;அஷ்டபா(BHA)வங்களை அடையவும் முடியாது.
ஸ்ரீமத் ஸாயீராமாயணம்
Wednesday, October 8, 2025
Shirdi Sai Baba Message
அன்பு கலந்த பக்தியும், நம்பிக்கை நிறைந்த சரணாகதியுமே எனக்கு சந்தோஷம் !
"சிலர் என் பாதத்தில் பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து அர்ப்பணிக்கிறார்கள். உண்மையான பக்தி இல்லாத, செல்வச் செழிப்பின் அஹங்காரம் மட்டுமே நிறைந்த அந்த பரிசுகளை நான் எப்படி ஏற்பேன் ?. ஜெகன்நாதனாகிய எனக்கு அந்த பரிசுகள் தேவையா ? என்னைப்பற்றிய அவர்களின் அறியாமையை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. ஆனால் , பரிசுத்தமான பக்தி நிறைந்து கண்ணீர் மல்க, நம்பிக்கையோடு நீ என்னிடம் வந்து சரணாகதி செய்வதுதான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. அன்புடன் நீ அளிக்கும் ஒரு சிறு மலர், ஒரு கோப்பை தேநீர்தான் எனக்கு அத்தனை உயர் செல்வங்களைக் காட்டிலும் மேன்மையானதாக உணர்கிறேன்."
- ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் திருவாய்மொழி நல்லமுத்துக்களாக
Wednesday, September 3, 2025
Sai Baba Message
எனது பக்தர்களை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை செய்துவிடுவேன் !
முழுவதுமாய் என்னைச் சரணடைவோரையும், பக்தி சிரத்தை குலையாது விசுவாசமாய் என்னைத் துதிப்பவர்களையும்,
என்னையே நினைந்து நினைந்து இடைவிடாது தியானிப்பவர்களையும், எல்லாவற்றிலிருந்தும் விடுதலை செய்துவிடுவது என்னுடைய பிரத்தியேகமான குணாதிசயமாகும்.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Wednesday, August 27, 2025
Sai Baba Message
22 ஓம் ஆராக்ய க்ஷோமதாய நமஹ
ஒருவர் நிம்மதியாக வாழ்வதற்கு,
முதலில் வேண்டுவது நோயின்மை;
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அடுத்தபடியாக உணவு,
உடை தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகள் கிட்ட வேண்டும்.
தமது பக்தன் இல்லத்தில் எந்த விதமான தேவையும் இருக்காது. என பாபா ஆணித்தரமாக உறுதியளிக்கிறார்.
ஏதாவது ஒரு பக்தனுக்கோ,அவனைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கோ நோய் ஏற்படுமானால்,
பாபா உடனடியாக நிவாரணமளிக்கிறார்.
எல்லா பக்தர்களுமே நோயில்லாமல் அமைதியான வாழ்க்கை நடத்த பாபா வழி வகுத்து உதவுகிறார்.
அவரே உறுதியளித்தபடி மகாசமாதி க்குப் பின்னரும்,இன்றும் பாபா தமது சமாதியிலிருந்து இயங்கிக்கொண்டு பக்தர்களின் நலனை பேணி வருகிறார்.
பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ. ஸ்வாமிஜி அருளிய அஷ்டோத்திரம் 🌸
விளக்கம் எஸ். சேஷாத்திரி 🙏
Wednesday, August 20, 2025
Sai Nesha Groups.in: Sai Baba Message
Wednesday, August 6, 2025
Sai Baba Message
அனாவசியமாகக் கவலைப்படாதீர் !"அனாவசியமாகக் கவலைப்படாதீர் ! உம்முடைய போதாதகாலம் இப்போதிலிருந்து தேயும் ! இறைவன் உம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்வார் !"ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
| Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
Wednesday, July 30, 2025
Sai Baba Message
எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி,எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ,நான் அவனுடைய அடிமை.
என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதேபோல் இருப்பேன்.
💞 ஸ்ரீ ஸாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள் 💞
| Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
Wednesday, July 23, 2025
Sai Baba Message
*ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் பாராயணம் செய்யும் நல்வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள் !*
_*"புனிதமானதும் தூய்மையானதுமான ஸாயீயின் சரித்திரம் திறந்த மனத்துடன் தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்பு கிடைக்கும்போது எந்த பாக்கியசாலி அதை நழுவ விடுவார்கள் ?"*_
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
Wednesday, July 16, 2025
Sai Baba Message
"சாயி" "சாயி" திருநாமத்தை வாயாரப்பாடி மனமாரத் துதியுங்கள் !
ஓ.. சாயி..! எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி மனமார துதிக்கிறானோ, அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாசம் செய்து அனுக்கிரஹம் செய்து அருள்பாலிக்கிறீர் பாபா !
பாபாவின் ஆரத்தி பாடலில்
| Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
Wednesday, July 9, 2025
Sai Baba Message
குருவைத் தரிசித்த நாளே வாழ்வின் மிகச்சிறந்த நன்னாள் !
ஓ..ஸ்ரீகுருவே ! மானிடர்களாகிய நாங்கள் மூடர்கள். எங்களை மன்னித்து விடுங்கள் !. மாயையினால் அறியாமை என்ற இருட்டினில் மூழ்கிக்கிடந்து, உங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்துவிட்டோம். எங்கள் வாழ்விலேயே மிகச்சிறந்த நன்னாள் எதுவென்றால் உங்களைத் தரிசித்த இந்நாளே !. நீங்கள் மாயைக்கு அப்பாற்பட்டவர் என்றும், சாட்சாத் பரப்பிரம்ம ரூபம் என்றும் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டோம். இன்று உங்கள் தரிசனத்தால் எங்கள் பாவங்களெல்லாம் அகன்றுவிட்டன.
- ஸ்ரீகுரு சரித்திரம்
சாய் பக்தர்கள் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் !
Wednesday, June 25, 2025
Sai Baba Message
உங்களுடனே நான் இருக்கும்போது நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை !
எதை எதையோ சாதிக்க வேண்டுமென்ற உத்தேசத்தால், வீணான முயற்சிகள் செய்யவேண்டாம். விரதங்கள், தீட்சைகள், ஹடயோகங்கள், உபவாச தீட்சைகள், உடலை வருத்தும் யாத்திரைகள் போன்ற முயற்சிகளைச் செய்து களைத்துப் போகாதீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றவே நான் அவதரித்துள்ளேன். உங்களுடனேயே நான் எப்பொழுதும் இருக்கிறேன். உங்களுடன் நான் இவ்விதமாக இருக்கையில், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? எதற்காகத் தேடுகிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை. நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள் !
- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி
| Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
Wednesday, June 11, 2025
Sai Baba Message
பயம் கொள்ளாதீர்கள்; நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன் !
கலியுகத்தில் பக்தர்களது பாதுகாவலராகவும், அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே. பக்தர்கள் அனைவருக்கும் இவர் கூறிய ஒரே போதனை, "பயம் கொள்ளாதீர்கள் ; நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன் !". இதற்கு கைம்மாறாக பக்தர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, "திட நம்பிக்கை மற்றும் பொறுமை !". இவ்விரண்டும் தன்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களிடமிருந்து அவருக்கு குறைவின்றி கிடைத்தன.
- பாபாவின் பொன்மொழி பூஜ்யஶ்ரீ நரசிம்ம சுவாமிகள்
| Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
Wednesday, March 19, 2025
Sai Baba Message
ஸ்ரீ ஸாயிசத்சரிதம் எனும் ராமபானம்
ஸ்ரீ சாயிசத்சரித்திரத்தை ஹேமட்பந்த் ராமபானத்திற்கு நிகராக ஒப்பிடுகிறார்..
ராமபானம் என்பது ஒருமுறை தன் வில்லிலிருந்து புறப்பட்டுவிட்டால் தன் இலக்கை அடையமால் வந்ததில்லை.அதே போல் பாபாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தன் இலக்கை அடையாமல் இருப்பதில்லை.
✨ ஹேமட்பந்த் ✨
Sai Nesha Groups - 9791043900
Wednesday, February 12, 2025
Sai Baba Message
*தாயன்பு விசித்திரமானது.* *தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்.*
*தன் பக்தர்களை தனது குழந்தைகளாகவே பாபா பார்க்கிறார்*
🌸 *ஸ்ரீ ஸாயீபாபாவின் சத்ய பொன்மொழிகள்* 🌸
Sai Nesha Groups 9791043900



.jpeg)









